தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி; தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் உள்ளன.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசினேன். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. தரவுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.இந்த கல்வியாண்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். என்றார்

எஸ்.திவ்யா

Leave a Reply