தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஸ்ரீ தென்காளஹஸ்தி என்னும் இராஜபதி திருக்கோயிலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
இக்கண்காட்சியில் சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தொழிலாளர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம் போன்ற 30-கும் மேற்பட்ட துறைகளின் மூன்றாண்டுகளில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிப் பணிகள் இடம்பெற்று இருந்தது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகள் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் கையேடு விநியோகம் செய்யப்பட்டது.
திருக்கோயில்களுக்கு வருகை தந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இக்கண்காட்சியியை கண்டு களித்தனர்.
-பி.கணேசன் @ இசக்கி.