ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த தமிழக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தைப் பொருத்த மட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.காரணம் ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டது. இந்நிலை தொடரக்கூடாது.

குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்களின் வாழ்வு ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம்.ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே த.மா.கா சார்பில் அறிக்கைகள் விடப்பட்டு, வலியுறுத்தப்பட்டது.

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்தித்த போது ஆன்லைன் சூதாட்டம் தடை சம்பந்தமாக பேசியபோது, இதற்கு தடை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூறினேன்.

தொடர்ந்து த.மா.கா வானது ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக குரல் – கொடுத்துக்கொண்டு வருகிறது.
நேற்று ஆன்லைன் சூதட்டம் சம்பந்தமாக தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் அவர்கள் அரசுக்கு திருப்பி அனுப்பியதாக செய்தி வெளிவந்தது.

உண்மை நிலை என்ன. ஆளுநர் அவர்கள் என்ன விளக்கம் கேட்டார், அரசு உரிய விளக்கம் அளித்திருக்கிறதா, என்பதெல்லாம் பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக மீண்டும் மசோதா நிறைவேற்றப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.

எனவே இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசும், ஆளுநர் அவர்களும் இதில் உள்ள சட்டச்சிக்கலை தீர்க்கக்கூடிய வண்ணம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கே.பி.சுகுமார்

Leave a Reply