ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95). வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 2-ந் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு சென்றிருந்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply