அதிமுக-வின் மூன்றாவது அத்தியாயம் ஆரம்பம்!- பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

எடப்பாடி கே.பழனிசாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்தார். இவரை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார்.

எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வானார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply