கள்ளச்சாராய விவகாரம்!-அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!-ஆளுநரை சந்தித்த அண்ணாமலை.

தமிழகத்தில் கள்ளச் சாராயம் காரணமாக 22 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த, சாராய வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து கொண்டிருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானைப் பதவி நீக்கம் செய்யும்படி தமிழக முதலமைச்சரை வலியுறுத்தக் கோரியும், மேலும், கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், தன் கடமையிலிருந்து தவறியது மற்றும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று, பண மோசடி செய்த வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொள்வது ஆகிய காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தக் கோரியும், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply