இலவசம் லஞ்சம் ஆகாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

scதேர்தல் வாக்குறுதிப்படி தரப்படும் இலவச பொருட்கள் லஞ்சமாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணிய பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களை லஞ்சமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Justice P.Sathasivam

Justice P.Sathasivam

Justice Ranjan

Justice Ranjan

இந்த மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கொண்ட அமர்வு, தேர்தல் வாக்குறுதிப்படி இலவச பொருட்கள் தருவது லஞ்சமாக கருத முடியாது என்று கூறியுள்ளனர்.

மேலும், இலவச திட்டங்கள் குறித்து வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலவசம் தொடர்பாக குழு ஒன்றை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply