தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி : தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு!

jj“ஜம்மு காஷ்மீர் மாநிலம், பதன்கோட் என்ற இடத்தில் 28.03.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 111-வது ராக்கெட் படைப் பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த லான்ஸ் அந்தோணி நிர்மல் விஜி அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

லான்ஸ் அந்தோணி நிர்மல் விஜிதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அந்தோணி நிர்மல் விஜியை இழந்து வாடும்  அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அந்தோணி நிர்மல் விஜியின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.