இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தானம் முகாம்!

DSCF1760பெருந்தலைவர் கு.காமராஜரின் 112-வது பிறந்தத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வழக்கறிஞர் சிலுவை தலைமையில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5-வது தெரு, பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் 20.07.2014 ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் 112 இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர். நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கண்களை இலவசமாகப் பரிசோதனை செய்து கொண்டனர். திருநெல்வேலி கார்த்திக் இரத்த வங்கி மற்றும் தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் பரிசோதனை ஏற்பாடுகள் செய்திருந்தனர்

-பொ.கணேசன் @ இசக்கி.