நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

DSCF8968 DSCF8963தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓம் முருகா ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பார்வதி அம்மாள் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு நிறுவனத்தின் தலைவர் எம்.காமராஜ் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர், அகிலாண்டபுரம் மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை நடுநிலைப்பள்ளித் தலைவர் பாண்டியம்மாள் சந்திரசேகர், பள்ளித் தலைமை ஆசிரியர் அமராவதி காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையாளர் விஜயன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் தேன்ராஜா ஆகியோர் பேசினர்.

இதில், பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கூடுதல் தொடக்கக் கல்வி உதவி அலுவலர் முத்தம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பவண் நந்தீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை ராஜையா வரவேற்றுப் பேசினார். இராமமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக விழா ஏற்பாடுகளை ஓம் முருகா ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

-கோ.சரவணக்குமார்.