பாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய பயணி ஒருவரது இரண்டு ட்ராலி பேக் கவனிப்பாரற்று கிடந்தன. இவற்றை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்ததில், அரிய வகை விலங்குகள் அதில் மறைத்து கடத்தி வரப்பட்டதை கண்டறிந்து மீட்டனர்.
அந்த பைகளில் 45 சுருள் மலைப்பாம்பு, 8 கட்டுவிரியன், 3 சிறிய வகை குரங்குகள், 2 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இவை ஏர் ஆசியா விமானம் மூலம் பாங்காக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.
எஸ். சதிஷ் சர்மா