புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் நினைவு இலச்சினை சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்விடத்திற்கு வந்ததும், ஆர்ய சமாஜத்தின் இடங்கள் மற்றும் அங்கு நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகளைக் கடந்து பிரதமர் நடந்து சென்று, யாகத்தில் ஆஹுதி அர்ப்பணத்தையும் செய்தார். பின்னர், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரப்பி வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியில் தீபம் ஏற்றுவதன் அடையாளமாக எல்இடி விளக்கு தீபத்தை இளைஞர் பிரதிநிதிகளிடம் பிரதமர் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் விழா வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் இது முழு உலகிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கும் ஒரு சந்தர்ப்பமாகும் எனவும் தெரிவித்தார்.  உலகத்தைச் சிறந்த இடமாக மாற்றும் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் லட்சியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், முரண்பாடு, வன்முறை மற்றும் உறுதியற்ற இந்த காலகட்டத்தில், மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை நம்பிக்கை அளிக்கிறது என்றார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளைக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த விழா இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் என்றும் பிரதமர் கூறினார். மனிதகுலத்தின் நலனுக்கான நடைமுறையாக யாகத்தில் ஆஹுதி அர்ப்பணத்தை பிரதமர் வழங்கினார். இதற்கான வாய்ப்புக் கிடைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சுவாமி அவர்கள் பிறந்த அதே மண்ணில் பிறந்தது தமது அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்ட பிரதமர், மகரிஷி தயானந்தரின்  லட்சியங்களால் தமது வாழ்க்கை  தொடர்ந்து  ஈர்க்கப்படுவதாக  எடுத்துரைத்தார்.

தயானந்த சரஸ்வதி  அவர்கள் பிறந்தபோது இருந்த இந்தியாவின் நிலையை நினைவுகூர்ந்த பிரதமர், பல  நூற்றாண்டுகளாக  அடிமையாக  இருந்த நாடு சிதைந்து  பலவீனமடைந்து, அதன் ஒளி மற்றும் தன்னம்பிக்கையை அப்போது இழந்து வந்தது எனக் கூறினார். இந்தியாவின் லட்சியங்கள், கலாச்சாரம் மற்றும் வேர்களை நசுக்க மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளையும் பிரதமர்  நினைவு  கூர்ந்தார். இந்தியாவின் மரபுகள் மற்றும் புனித நூல்களின் உண்மையான அர்த்தம் மறக்கப்பட்டுவிட்டதை சுவாமி தயானந்த சரஸ்வதி  சுட்டிக்காட்டினார்  என பிரதமர் தெரிவித்தார். இந்தியாவை இழிவுபடுத்துவதற்கு வேதங்கள் மீது தவறான விளக்கம் பயன்படுத்தப்பட்டு, பாரம்பரியங்கள் சிதைக்கப்பட்ட காலத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். அத்தகைய நேரத்தில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் முயற்சி ஒரு மீட்பராக வந்தது என அவர் குறிப்பிட்டார். மகரிஷி அவர்கள், பாகுபாடு மற்றும் தீண்டாமை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக ஒரு வலுவான பிரச்சாரத்தைத் தொடங்கியதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மகரிஷியின் முயற்சிகள் மகத்தான தன்மைகளைக் கொண்டது என அவர் கூறினார். அவர் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு எதிராக ஏற்பட்ட எதிர்வினைகளை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். மதத்தின் மீது பொய்யாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சுவாமி ஜி அவர்கள், மதத்தின் ஒளியாலேயே அகற்றினார் என்று பிரதமர் விளக்கினார். தீண்டாமைக்கு எதிரான சுவாமி அவர்களின் போராட்டத்தை மிகப்பெரிய பங்களிப்பாக கருதுவதாக  மகாத்மா  காந்தி  கூறியதையும்  பிரதமர்  சுட்டிக்காட்டினார்.

பெண்கள் தொடர்பாக சமூகத்தில் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ள ஒரே மாதிரியான பிற்போக்குக் கருத்துக்களுக்கு எதிராக தர்க்கரீதியான மற்றும் பயனுள்ள மாற்றுக் குரலாக மகரிஷி தயானந்த சரஸ்வதி உருவெடுத்தார் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். மகரிஷி தயானந்தர் அவர்கள், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை கடுமையாக எதிர்த்தார் எனவும் 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் கல்விக்கான பிரச்சாரங்களை அவர் தொடங்கினார் என்றும் பிரதமர் தெரிவித்தார். இன்றைய காலத்திலும் கூட, பெண்களின் கல்வி மற்றும் மரியாதைக்கான உரிமையைப் பறிக்கும் சமூகங்கள் உள்ளதாக பிரதமர் கூறினார். ஆனால் பெண்களுக்கு சம உரிமை என்பது வெகு தொலைவில் இருந்த அந்தக் காலத்திலும்கூட அவர்களுக்காக குரல் எழுப்பியவர்  மகரிஷி  தயானந்தார்  என்று  பிரதமர்  கூறினார்.

மகரிஷி அவர்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளின் அசாதாரணத் தன்மையைப் பிரதமர் எடுத்துரைத்தார். ஆர்ய சமாஜத்தின் 150 ஆண்டுகளுக்குப் பிறகும், தயானந்த சரஸ்வதி பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் அவர் மீது கொண்டுள்ள மரியாதையும், ஆன்மீக உணர்வும் தேசத்தின் மீது அவர் முக்கிய கவனம் செலுத்தினார் என்பதற்கான அடையாளம் என்று பிரதமர் கூறினார். விடுதலையின் அமுத காலத்தில், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா, புனிதத்துவத்தின் உத்வேகத்துடன் வந்துள்ளது  என்று அவர் மேலும் கூறினார்.

திவாஹர்

Leave a Reply