ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர் .

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், லிதுவேனியா, லாவோ, கிரீஸ், கௌதமாலா, எஸ்வாட்டினி ஆகிய நாடுகளின் தூதர்கள் சமர்ப்பித்த நியமனப் பத்திரங்களை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

நியமனப் பத்திரங்களை இன்று வழங்கியவர்கள் வருமாறு:

  1. திருமதி டயானா மிக்கிவிசியனே, லிதுவேனியா குடியரசுத் தூதர்
  2. திரு. பவுன்மி வான்மணி, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதர்
  3. திரு டிமிட்ரியோஸ் ஐயனோவ், கிரீஸ் தூதர் 
  4. திரு உமர் லிசான்ட்ரோ காஸ்டனேடா சோலாரஸ், கௌதமாலா குடியரசுத் தூதர்
  5. திரு. மென்சி சிபோ ட்லாமினி,  எஸ்வாட்டினி கிங்டம் தூதர்

எம்.பிரபாகரன்

Leave a Reply