பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான குற்றவிசாரணை நடத்திட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை.

விசாரணை என்னும் பெயரில் குரூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர்சிங் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான குற்றவிசாரணை நடத்திட வேண்டும்.

மனித உரிமை மீறல், மனிதசித்ரவதை, அதிகார வரம்புமீறல் போன்றவை துறைசார்ந்த விதிமீறல்கள் அல்ல; கிரிமினல் குற்ற நடவடிக்கைகளாகும். எனவே, கிரிமினல் வழக்குத் தொடுத்து தலையீடுகள ஏதுமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையினருக்கு மனித உரிமைக் கல்வியை வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும். அதிகாரி என அவரைப் பாதுகாத்திட முனைவது அறமல்ல.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply