பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவை உலக அரங்கில் இடம்பெறச் செய்யும்: ஜிதேந்திர சிங்.

வரும் ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவை உலக அரங்கில் இடம்பெறச் செய்யும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி-நிதி) முன்முயற்சியின் 8 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், தில்லி ஐஐடியில் இன்று புதிய டிஎஸ்டி-நிதி இணையதளத்துடன், இந்தியா முழுவதும் 8 புதிய நிதி ஐ-டிபிஐகளை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பேசினார்.

8 புதிய NIDHI உள்ளடக்கிய TBIகள் (i-TBIs0) நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 1.ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம் அஜ்மீர்.2. குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கின  அறிவியல் பல்கலைக்கழகம், லூதியானா, பஞ்சாப் 3. பி.எல்.டி.இ பிஜாப்பூர், கர்நாடகா 4. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 5. பிரன்வீர் சிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கான்பூர், உத்தரபிரதேசம் 6. குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா (மத்திய பல்கலைக்கழகம்) பிலாஸ்பூர், 7. ஜி.எஸ். மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மைசூர், கர்நாடகா 8. பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் (UPES), டேராடூன்,)

i-TBI (உள்ளடக்கிய TBI) என்பது மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் மற்றும் அருகிலுள்ள சமூகங்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்க்கக்கூடிய கல்வி நிறுவனங்களுக்கு DST ஆதரவளிக்கும் மூன்று ஆண்டு கால முயற்சியாகும்.

மத்திய அறிவியல், தொழில்நுட்ப இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், டீப் டெக் புத்தொழில்களுக்கான டிஎஸ்டி-ஜிடிசி ஐஐடி மெட்ராஸ் இன்குபேட் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஐ.ஐ.டி மெட்ராஸின் புகழ்பெற்ற மூன்று முன்னாள் மாணவர்களான டாக்டர் குருராஜ் தேஷ்பாண்டே, திருமதி ஜெய்ஸ்ரீ தேஷ்பாண்டே மற்றும் திரு ‘கிரிஸ்’ கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் நிதியுதவியுடன் ஜி.டி.சிக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நமது ஆதரவை விரிவுபடுத்தவும், வளர்ச்சியின் முக்கியமான கட்டங்களில் உள்ள புத்தொழில்களுக்கு இலக்கு உதவிகளை வழங்கவும் இந்த முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், மோடியின் ஸ்டார்ட் அப் இந்தியாவை ஸ்டாண்ட் அப் இந்தியா முன்முயற்சியில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலை நினைவு கூர்ந்தார். இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், “நமது கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, இந்தியாவின் கண்டுபிடிப்பு சூழலியல் அமைப்பில் அடையாளம் காணப்பட்ட ஒரு முக்கியமான தேவைக்கு பதிலளிக்கும் வகையில், நிதி முன்முயற்சி இருந்தது. நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை உருவாக்குவதால், இந்த யோசனைகளை சந்தைக்குத் தயாராக உள்ள தயாரிப்புகளாக மாற்ற வேண்டிய அவசியம் இருந்தது. புத்தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கு ஆரம்பகால தொழில்துறை இணைப்பு குறித்தும் அவர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் புதிய ஆற்றல் ஆகியவற்றுடன், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய இந்தியாவை எதிர்கால இந்தியாவாக மாற்றுவதற்கான புதுமையான திறனைக் கொண்டுள்ளன என்று அவர் வழிகாட்டினார்.

2016-ல் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பயணத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் நினைவுகூர்ந்தார். அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் நிதித் திட்டம், புத்தொழில் அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது என்றும், ஏராளமான தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், அவற்றில் கணிசமான பகுதி பெண் தொழில்முனைவோர்களால் வழிநடத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply