2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 4.0 -ல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பங்கேற்கும்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்கும். நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்ப்பது மற்றும் அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இயக்கத்தை அது மேற்கொள்ளும். தூய்மை இயக்கத்தின் அடுத்த கட்டம் செப்டம்பர் 16 அன்று தொடங்கும்.

2024 ஆகஸ்ட் 29 அன்று சிறப்பு பிரச்சாரம் 4.0 க்கான செயல் திட்டத்தை விவாதித்து இறுதி செய்வதற்கான கூட்டத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் திரு வும்லுன்மங் வால்னம் தலைமை தாங்கினார், இதில் அமைச்சகம், இணைக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும்  மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் முழு வீரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் பெரிய அளவில் பங்கேற்க தயாராக உள்ளன.

நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 3.0 மற்றும் தூய்மை (அக்டோபர் 02 -31, 2023) மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து அலுவலகங்கள், கள அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட நிலுவையில் உள்ள விஷயங்களைக் குறைத்து தூய்மையை நிறுவனமயமாக்குவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பங்கேற்றது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முந்தைய பிரச்சாரங்களின் நோக்கங்கள் மற்றும் சாதனைகளை கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ளது.

Leave a Reply