ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தேநீர் அருந்தியபடி சுவையான உரையாடல்கள்! பிரதமர் வீட்டுவசதி திட்டப்  பயனாளிகளுடன் அமர்ந்து அவர்களின் வாழ்க்கைப் பயணங்களைக் கேட்டறிந்தேன். குறிப்பாக, இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டமும், இதுபோன்ற பிற திட்டங்களும் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பது குறித்து அவர்கள் பேசினர்.”

Leave a Reply