வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா மாறத் தயாராக உள்ளது என்றும், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் தரமான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குபவர்களாக இந்திய நிறுவனங்கள் மாறும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறிநுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ்  தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர், எதிர்காலத்தில் இந்தியா சர்வதேச தொலைத் தொடர்பு விநியோகச் சங்கிலிகளை வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், நெட்வொர்க் இணைப்பில் இன்னும் பின்தங்கிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புகளை கொண்டு செல்ல உதவும் தீர்வுகளைக் கண்டறியுமாறு நிறுவனங்களை வலியுறுத்தினார். உலகளாவிய தெற்கில் தொழில்நுட்பம் கிடைக்கச் செய்வதிலும், உலகம் முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மலிவானதாக மாற்றுவதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கை நிறைவேற்றுவதில் உலகை வழிநடத்துவதிலும் இந்தியாவின் பங்கு உள்ளது. நாடு முழுவதும் தடையற்ற அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கியது, ‘உலகின் நம்பகமான பங்குதாரர்’ என்ற புனைப்பெயரை இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

2015-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட முன்னோடி ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரத்தின் சாதனையாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தியாவின் நிலையான நெட்வொர்க் இணைப்பை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். நல்லாட்சிக்கும், வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அவர் பாராட்டினார். இந்தியா இன்று ஒரே தேசமாக சிந்திக்கிறது என்று கூறிய திரு கோயல், இளைஞர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டின் சிந்தனை செயல்முறையையும் நாட்டின் வளர்ச்சியை நோக்கி ஒருங்கிணைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் தடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர 2015-ம் ஆண்டில் டிஜிட்டல், உந்துதலுக்கு உதவியது என்று திரு கோயல் தொடர்ந்து கூறினார். நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களுக்கு உயர் தரம், மலிவு மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் உறுதி செய்யப்படுகின்றன, மேலும் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய திறன் மையங்களுக்காக இந்தியாவைப் பார்க்க அனுமதிக்கும் தடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்றார்அவர்.

Leave a Reply