ரபி பருவத்திற்கான தேசிய வேளாண் மாநாட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஏற்பாடு செய்கிறது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை நாளை ரபி பருவத்திற்கான ஒருநாள் தேசிய வேளாண் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியின் பூசாவில்  அமைந்துள்ள பாரத ரத்னா சி சுப்பிரமணியன் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் இணையமைச்சர்  திரு ராம்நாத் தாகூர் கலந்து கொள்கிறார். இந்த முக்கியமான மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பல்வேறு மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் எதிர்வரும் ரபி பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.   இந்த மாநாட்டில் 5 அமர்வுகள் நடைபெறும். அமர்வுகளைத் தொடர்ந்து அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், இணையமைச்சர் திரு ராம்நாத் தாகூர் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் விவாதம் நடைபெறும்.

Leave a Reply