தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்! Dr.வருண்குமார் திருச்சி சரக டி.ஐ.ஜியாகவும், அவரது மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டிஐஜியாகவும் பதவி உயர்வு! – உத்தரவின் உண்மை நகல்.

This image has an empty alt attribute; its file name is 1002073150.jpg

This image has an empty alt attribute; its file name is IMG-20241230-WA0006-813x1024.jpg

This image has an empty alt attribute; its file name is IMG-20241230-WA0007-780x1024.jpg

This image has an empty alt attribute; its file name is IMG-20241230-WA0008-753x1024.jpg

This image has an empty alt attribute; its file name is IMG-20241230-WA0009-724x1024.jpg

This image has an empty alt attribute; its file name is IMG-20241230-WA0011-724x1024.jpg

This image has an empty alt attribute; its file name is IMG-20241230-WA0012-724x1024.jpg

தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி எஸ்.பி Dr.வருண்குமார் திருச்சி மாவட்ட சரக டி.ஐ.ஜியாகவும், அவரது மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல் மாவட்ட சரக டிஐஜியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு :

  • ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு
  • தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி யாக பதவி உயர்வு
  • திருச்சி எஸ்.பி வருண்குமார் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி சரக டி.ஐ.ஜியாக நியமனம்
  • புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமனம்
  • நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாக பதவி உயர்வு
  • தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு.

12 மாவட்டங்கள் – புதிய எஸ்.பி.க்கள் :

  • ராணிப்பேட்டை – விவேகானந்தா சுக்லா
  • விழுப்புரம் – P.சரவணன்
  • கடலூர் – S.ஜெயக்குமார்
  • அரியலூர் – தீபக் சிவாச்
  • தஞ்சாவூர் – R.ராஜாராம்
  • திருவாரூர் – கரத் கருண் உத்தவ்ராவ்
  • திருச்சி – S.செல்வநாகரத்தினம்
  • புதுக்கோட்டை – அபிஷேக் குப்தா
  • திருப்பூர் – யாதவ் கிரிஷ் அஷோக்
  • சிவகங்கை – ஆஷிஷ் ராவத்
  • தென்காசி – S.அரவிந்த்
  • கன்னியாகுமரி – R.ஸ்டாலின்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :

  • சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம்
  • சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமனம்
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம்
  • சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
  • கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
  • கோவை தெற்கு, துணை ஆணையர் சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., சென்னை தென்மண்டலத்திற்கு நியமனம்
  • நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமனம்
  • சென்னை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், திருவல்லிக்கேனி துணை ஆணையராக
  • ஆவடி துணை ஆணையர் அன்பு ஈரோடு சிறப்பு படை எஸ்.பியாக நியமனம்
  • ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்

உள்ளிட்ட 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply