குடியரசுத் துணைத் தலைவர், அக்டோபர் 16-17 தேதிகளில் குவஹாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் மற்றும் டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர், 2024 அக்டோபர் 16-17 தேதிகளில் குவஹாத்தி (அசாம்) மற்றும் மேகாலயாவில் உள்ள ஷில்லாங் ஆகிய இடங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.

தனது பயணத்தின்போது, குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகத் தலைமை தாங்கி, நியூ ஷில்லாங்கில் உள்ள மாவ்டியாங்டியாங்கில் மேகாலயா திறன் மற்றும் புத்தாக்க மையத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.

ஷில்லாங்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ராஜ்பவன் ஆகியவற்றிற்கு செல்லும் குடியரசுத் துணைத் தலைவர், முதலமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

Leave a Reply