தமிழக அரசு பருவமழை துவங்கிய நிலையில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கையை தொடர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு வடகிழக்கு பருவமழைக்காலங்களில் விவசாய நிலங்களை மழையின்
பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்
வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய சம்பா சாகுபடி சூழலில் மழைநீர் தேங்கி பயிர் சேதமடைய வாய்ப்புண்டு.
இந்நிலையில் வடிகால் வசதிகள் முறையாக சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார, மழைநீர் தேங்காமல்
வடிவதற்கு ஏதுவாக தொடர் நடவடிக்கை தேவை.

[
அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் உள்ள விவசாயிகள்
மழைக்காலத்தில் பயிர்கள் சேதமடையாமல் இருப்பதற்கு அரசின் உதவிகள் இந்நேரத்தில்
அவசியம் என கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால்களை முறையாக
கண்காணித்து, சரி செய்து, தயார் நிலையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொண்டு
பயிர்களை பாதுகாக்க வேண்டும்.
குறிப்பாக டெல்டா மாவட்டப்பகுதிகளில் காவிரி பாசனப் பகுதிகளில் வடிகால்கள் மண்
எக்கல் அடித்து நீர் வடிவதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் மண்ணை
தூர்வாரி மழைநீர் வடிவதற்கான வகையில் ஏற்பாடு செய்து கொடுத்து விவசாய நிலங்களை
பாதுகாக்க வேண்டும்.
தமிழக அரசு கடந்த கால பருவ மழையின் போது விவசாய நிலங்கள், பயிர்கள்,
விவசாயிகள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு முன்னேற்பாடான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே மழைக்காலப் பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை, பயிர்களை,
விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.
மேலும் தமிழக அரசு தொடர்ந்து மழைப்பெய்ய இருக்கின்ற வேளையில் மழை
வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை
மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

Leave a Reply