நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகைளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஜெக்தீப் தாங்கர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திவாஹர்