காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் உதவித்தொகையாக வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.”
திவாஹர்