பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களை பார்வையிட்டார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்குள்ள யானைகள் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடி, யானைகளுக்கு உணவளித்தார். ஆஸ்கார் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள யானைக் காவலர்களுடனும் பிரதமர் உரையாடினார்.
தொடர் ட்வீட்டில் பிரதமர் கூறியதாவது:
“இயற்கையான பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காலை கழித்தேன் மற்றும் இந்தியாவின் வனவிலங்குகள், இயற்கை அழகு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பார்த்தேன்.”
“பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து இன்னும் சில காட்சிகள்.”
“முதுமலை புலிகள் காப்பகத்தில் கம்பீரமான யானைகளுடன்.”
“அற்புதமான பொம்மனையும் பெல்லியையும், பொம்மி மற்றும் ரகுவையும் சந்திப்பதில் என்ன மகிழ்ச்சி.”
எம்.பிரபாகரன்