இரண்டாவது போர்முனை மற்றும் வான்வெளி வியூக நிகழ்ச்சியின் கீழ் கேப்ஸ்டோன் கருத்தரங்கை இந்திய விமானப்படை புதுதில்லியில் உள்ள விமானப்படை அரங்கில் நடத்தியது. வான்வெளி போர்முனை மற்றும் வான்வெளி அதிகாரக் கல்வி மையம் சார்பாக இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
போர்முனை மற்றும் வான்வெளி வியூக நிகழ்ச்சி என்பது கடந்த 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 15 வாரங்கள் கால அளவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வியூகம் சார்ந்த கல்வியியல் நிகழ்ச்சியாகும். கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான கருத்துக்களுக்கு வியூகம் அமைத்து அதிகார வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட திறமைகளை வளர்ப்பதற்கு கருத்தியல் நிபுணர்களின் திறன்களை வளர்ப்பதுதான் இதன் மிகப் பெரிய நோக்கமாகும்.
எம்.பிரபாகரன்